Followers

my adds

Wednesday, 25 May 2016

Lungs Weakness of Children ( குழந்தைகளின் நுரையீரல்---பலவீனம்)


பலவீனம் ஆகிறது சென்னை குழந்தைகளின் நுரையீரல்!
சூழல் மாசு அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்




2013ம் ஆண்டு சமூக மருத்துவத் துறையின் மேற்படிப்புக்காக ஒரு மாணவர், ‘காற்று மாசுக்கேடு அதிகமுள்ள  பகுதிகளில்  மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற வகையில் ஓர் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின் இதை  விரிவாக செய்தால் பலருக்கும் பயனுடையதாக இருக்குமே என எங்களது சமூக மருத்துவத்துறையும், சென்னை ஐஐடி  கல்வி நிறுவனமும் இணைந்து ஆய்வை விரிவுபடுத்தினோம். முக்கியமாக சென்னையில்  காற்று மாசுக் கேடு  அதிகமுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இந்த ஆய்வை செய்தோம்.

தி.நகர் போன்ற போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் வாகனங்களின் புகையால் காற்றானது பெருமளவு மாசுக்கேடு  அடைந்துள்ளது. இப்படி மாசுக்கேடு அடைந்த காற்றைச் சுவாசிப்பதால் குழந்தைகளின் நுரையீரல் பெருமளவு  பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 204 சிறுவர்களை பரிசோதனை செய்தோம். தி.நகர் பள்ளியில் பாதி சிறுவர்களுக்கு நுரையீரல் தேவைக்கு குறைவாக வேலை செய்யும் அளவிலேயே இருந்தது. சிலருக்கு நுரையீரலில் நோய்த்தொற்றும்  இருந்தது. சரியாக சிகிச்சையளிக்காமல் விட்டால் சரியாக சுவாசிக்க முடியாமல் போவது, நுரையீரல் சுருங்குதல் போன்றவை நிகழும்.

எதிர்ப்பு சக்தியின் அளவு கூட சிலருக்கு குறைகிறது. இதனால் காற்றின் வழியாக வரும் தேவையற்ற மாசுக்கள்  நுரையீரலில் சென்று பாதிக்கிறது. ஐஐடி வளாகத்துள் இருக்கும் பள்ளியின் சிறுவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் அதிகம்  இல்லை. வாகனப் போக்குவரத்து அதிகம் கிடையாது. புகை மண்டலம் இல்லை. இயற்கையான மரங்கள், செடி கொடிகள் என பசுமையாக சூழலை பராமரிப்பதால் நுரையீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

சென்னையில் வாகனங்களின் பெருக்கம்தான் அதிக அளவில் மாசுக்கேடுகளை உருவாக்குகின்றன. இது சுவாசப்  பிரச்னைகளை மட்டும் உருவாக்குகிறது என பலர் நினைத்துக்கொள்வார்கள். உண்மையில் உச்சி முதல் உள்ளங்கால்  வரை பல பிரச்னைகளை சுற்றுப்புற மாசுக்கேடுகள் ஏற்படுத்துகின்றன. முடி கொட்டுதல், இளம் வயதில் முடி நரைத்தல்இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிப்படைதல், இளம் வயதிலேயே வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்துவது போன்ற  பிரச்னைகள் ஏற்படுவதற்கு சுற்றுச்சூழல் மாசுக்கேடு முக்கிய காரணம்.

முதியவர்களுக்கு இதனால் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தையின்மை பிரச்னை உருவாகக் கூட  சுகாதாரமில்லாத சுற்றுச்சூழல் காரணமாக அமைகிறது என்பதால், இந்த விஷயத்தில் தம்பதிகள் கவனமாக இருக்க  வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. நுரையீரலையும் சரியான  முறையில் செயல்பட விடாது.

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளால் சாலைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன. காற்றடிக்கும் போது 3  முதல் 4 அடி வரை தூசி பறக்கிறது. இதனாலும்  மாசுக்கேடு பாதிப்புகள் சென்னையில் அதிகமாக உள்ளன. புதிய  சாலைகள் போடுவதன் மூலமும் சாலையை சுத்தமாக குப்பைகளின்றி பராமரிப்பதாலும் மட்டுமே, இத்தகைய தூசிப்  படலம் எழுவதை தடுக்க முடியும்.சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க  உணவுகளை கொடுத்தால் உடலில் நல்ல எதிர்ப்புசக்தி உருவாகி நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். பள்ளிகளின் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். பள்ளிகளின் போர்டு, தரையில் உள்ள தூசிகளை துணியை வைத்து தட்டக்கூடாது.

தூசிகள் அங்கு உள்ள சிறுவர்களுக்கு பரவும். வகுப்பறைகளை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்தினால் தூசிகள்  பரவாது. சுவாசப் பயிற்சிகளை (Breathing exercises) சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்  செய்து வந்தால் நுரையீரல் சுருங்குவது, தேவைக்குக் குறைவாக வேலை செய்தல் ஆகிய பிரச்னைகள் வராமல்  காக்கலாம். சத்தான காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மிகுந்த பருப்புகள் ஆகியவற்றில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள்  அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி, உடல் ஆரோக்கியமாகும்.

பொதுமக்கள் கண்ட இடத்தில் குப்பைகளை போடுவதையும், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் குப்பைகளை  எரிப்பதையும் தவிர்க்க வேண்டும். வாகன நெரிசலுக்கும், காற்று மாசுக்கேடு அடைவதற்கும்  இருசக்கர வாகனங்கள்  வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காரணம் என்பதை உணர வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு வாகனத்தை  பயன்படுத்தாமல் ஓரிரு வாகனத்தை பகிர்ந்து கொண்டாலே வாகன நெரிசல் பெருமளவு குறையும்.

இரு சக்கர வாகனத்தை முறையாக பராமரித்து அடிக்கடி இஞ்சின் ஆயிலை  மாற்றினால், வாகனத்தில் இருந்து  புகை  வராது. சரியாக பராமரிக்கப்படாத, தரமான எரிபொருள் நிரப்பப்படாத வாகனங்கள்தான் புகை மண்டலத்தை உருவாக்கி  காற்றை மாசடையச் செய்கின்றன. வீட்டுக்கு அருகில் உள்ள இடங்கள் என்றால் முடிந்த வரை நடந்தே செல்லுங்கள்.  தேவையற்ற எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும். காற்றையும் கொஞ்சம் சுத்தப்படுத்தும்...’’இந்த  ஆய்வை  ஐஐடி  கல்வி நிறுவனம் சார்பில் நடத்திய சூழலியல் மற்றும் நீர்வளத்துறை பொறியியல் துறையின் இணை பேராசிரியர் சிவ  நாகேந்திராவிடம் பேசினோம்...

நகரங்களில் பொதுவாக வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை 70 சதவிகிதம். தொழிற்சாலைகளின் மூலம்  வெளிப்படும் புகை மற்றும் மாசுக்கள் 20 முதல் 30 சதவிகிதம்.  வீடுகளிலிருந்து வெளிவரும் புகை 10 சதவிகிதம்.  இவ்வாறு  காற்றை மாசுக்கேடு அடைய செய்யும் காரணிகளை மூன்றுவகையாக பிரிக்கலாம். சென்னையின் சில  பகுதிகளில் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொண்டு இருக்கிறோம். மணலி, பெருங்குடி ஆகிய பகுதிகளிலும் சுற்றுப்புற  மாசுக்கேடு எப்படி உள்ளது என அளவிட இருக்கிறோம்.

தி.நகர் பகுதியில் வாகன நெரிசல், கடைகள் அதிகரிப்பு, மக்கள்தொகை நெருக்கம் ஆகிய காரணங்களால் மாசுக்கேடின்  அளவு சற்று அதிகமாக உள்ளது. பழைய வாகனங்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதிக அளவு  புகை உமிழ்பவை பழைய வாகனங்கள்தான். லாரிகளில் அளவுக்கு அதிகமான எடையை ஏற்றி ஓட்டினாலும் வெளிப்படும்  புகையின் அளவு அதிகமாக இருக்கும். ஒரு டன் ஏற்றிச் செல்லும் லாரியில் இரு டன் எடையை ஏற்றினால் வண்டி  திணறி அளவுக்கு அதிகமான எரிபொருளை குடிக்க ஆரம்பிக்கும். புகையையும் அதிகமாக உமிழ ஆரம்பிக்கும்.

வீடுகளை கட்டும் போது சூழலியல் மாசுக்கேடை ஏற்படுத்தாதவாறு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்.  இயற்கையான மரங்கள், செடி, கொடிகளை வீடுகளில், அலுவலகங்களில் போதிய அளவு வளர்த்தாலே  காற்று சுத்தமாகும். சூழலியலின் தன்மையும் மாறும்...’’ சென்னை  போன்ற நகரங்களில் ஏற்படும் சூழலியல்  மாசுக்கேடுகளில் இருந்தும், நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை சொல்கிறார் நுரையீரல்  நோய்கள் நிபுணர் டாக்டர் வினோத்குமார்...

இரு வழிகளில் நமக்கு பாதுகாப்பு தேவை. ஒன்று நம்மை நாமே மாசுக்கேடுகளில் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.  இரண்டாவது அரசு நம்மை பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் போன்ற  நாடுகளில் 10  ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை ஓட்ட உரிமம் தருவதில்லை. ஏனெனில் பழைய கார், பேருந்து  போன்றவைதான் அதிக கரும் புகையை வெளியிட்டு சூழலை மாசுபடுத்தும். நம் நாட்டிலோ 10 வருடம் தாண்டியசரியாக பராமரிக்கப்படாத வண்டிகளே பெருமளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதை அரசு கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு கட்டுப்படுத்தினால் வாகன மாசுக்கேடு பெருமளவில் குறையும். புதிதாக  கட்டிடங்கள் கட்டும் போது அந்தப் பகுதியை சுற்றிலும் ஏற்படும் மாசுக்கேடானது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.  இதில் சில விதிகள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்காமல் இயற்கையான இடங்களில்மைதானங்களில் விளையாட விட வேண்டும். இதனால் நுரையீரலுக்கு கிடைக்கும் நல்ல ஆக்ஸிஜனின் அளவு  அவர்களுக்கு  அதிகரிக்கும்.

எதிர்ப்பு சக்தியும் மேம்படும். காலை எழுந்தவுடன் நடைப்பயிற்சி, யோகா, சிறு ஓட்டம் என பழக்கப்படுத்திக் கொண்டால்  நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படும். வாகனப் புகையும், மாசுக்களும் அதிகமுள்ள பகுதிகளில் செல்லும் போது N95  என்னும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். சிக்னலில் வாகனங்கள் அதிக நேரம் நிற்கும் போது  மாசுக்கேடால்  அதிகம் பாதிக்கப்படுகிறோம். அதனால் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும் உள்ளே மாஸ்க் அணிந்து கொள்வது  தேவையற்ற மாசுக்களை தடை செய்து உங்கள் நலனை அதிகரிக்கும்.’’

மலட்டுத்தன்மை -Infertility







குழந்தையின்மை

குழந்தையின்மைக்கான காரணங்களைப் பற்றி திருமணத்துக்குப் பிறகு கவலைப்படுவதற்கு பதில், குழந்தை பிறந்தது  முதலே விழிப்பாக இருந்தால் அடுத்த தலைமுறையை அந்தப் பிரச்னையிலிருந்து மீட்கலாம்...’’ என்கிறார்  மதுரையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் செல்வி. அவர் சொல்கிற தகவல்கள்அம்மா-அப்பா ஆகப் போகிறவர்களுக்கானவை அல்ல. அம்மா-அப்பா ஆனவர்களுக்கானவை.

திருமணமான தம்பதியர், வாரம் இரு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள வேண்டும். 30 வயதுக்கு  உள்ளானவர்கள் 1 வருடம் வரை குழந்தைக்காக காத்திருக்கலாம். 35 வயதுக்கு மேலானவர்கள் 6 மாதங்கள் வரை  காத்திருக்கலாம். அதன்பிறகும் கருத்தரிக்காவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்பது பொதுவான அறிவுரை.  ஆனால், இதெல்லாம் சூழலும் உணவுப் பழக்கங்களும் வாழ்வியலும் முறையாக இருந்த போன தலைமுறை காலக்கட்டத்துக்கானவை. முறையற்றுப் போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் அந்த ஆலோசனை எந்த அளவுக்கு உசிதமானது என்பதுதான் கேள்வியே...

தன் மகனுக்கோ, மகளுக்கோ பிற்காலத்தில் வாரிசு இல்லாமல் போய் விடக்கூடாதே எனக் கவலைப்படுகிற தாய், தன் குழந்தை பிறந்த நொடியிலிருந்தே அதற்கான பாதுகாப்பு  நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இதென்ன பைத்தியக்காரத்தனமான தகவலாக இருக் கிறதே என நினைக்கிறீர்களா? குழந்தையின்மைப் பிரச்னைக்கான விதைகள், குழந்தைப் பருவத்திலிருந்தே நடப்பட்டு, வளர்க்கப்பட்டு, விருட்சமாகின்றன என்பதை உணர்வீர்களா?நாகரிக வாழ்க்கை போதைகளுக்குப் பழகியவர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் விந்தையாகத்தான் இருக்கும். சந்ததியைப் பெருக்கவும் பாதுகாக்கவும் நினைக்கிற ஒவ்வொருவரும் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காகவே இந்தத் தகவல்கள்...

சில தலைமுறைகளுக்கு முன்னால் 10, 12  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு ஆரோக்கியமாக இருந்தது  நம் மனித இனம்.  இன்று இயற்கையாக நிகழக்கூடிய கருத்தரிப்பு என்ற விஷயத்துக்காக லட்சங்களை வாரி  இறைப்பதும் வாழ்க்கையை தொலைத்துவிட்டுத் தவிப்பதும் ஏன்? இதைத் தெரிந்து கொள்ள கடந்த 50 ஆண்டுகளில்  மனித வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

முதலும் முக்கியமுமான விஷயம்... மனிதர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மறந்து, மறுத்து செயற்கையான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.  பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றுக்கு இந்தப்  பிரச்னை வரவில்லையே... ஏனென்றால் அவை இயற்கையோடு வாழ்கின்றன. மனிதர்கள் விஞ்ஞான வளர்ச்சி, அறிவு  வளர்ச்சியின் காரணமாக தம் வசதிக்காகவும் வாழ்க்கையை எளிமையாக்கவும் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் மின்னணுச்  சாதனங்கள், வாகனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் போன்றவை அவர்களுக்கு நன்மை செய்வதைவிட  தீமைகளையே அதிகம் செய்வதாகத் தோன்றுகிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் உண்கிற  எல்லாமே ரசாயனக் கலவை என்பதை அறிவோமா?

காலை எழுந்ததும் உபயோகிக்கிற டூத் பேஸ்ட், சோப், பாடி லோஷன், ஷாம்பு, முடி அதிகரிக்கச் செய்வதாக வருகிற  எண்ணெய்கள், சீரம், முக அழகுச் சாதனங்கள், ஐ லைனர், மஸ்காரா, சென்ட்... இன்னும் நமக்குத் தெரியாத பியூட்டி  பார்லர் பொருட்கள் என அனைத்திலும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும், ஹார்மோன் சுழற்சியை பாதிக்கும் ரசாயனங்கள்  இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வீட்டில் தரையை சுத்தப்படுத்தும் திரவம் முதல் கழிவறையை சுத்தம் செய்கிற  டாய்லெட் கிளீனர் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பற்களுக்கு மூலிகை பல்பொடியும், தலைக்கு சீயக்காயும், உடம்புக்கு நலங்கு மாவும் ஆரோக்கியத்தைக் கொடுத்தன  என்பதை மறந்து விடாதீர்கள். சருமத்தில் படக்கூடிய எந்த ரசாயனப் பொருளும் உடனடியாக  கிரகிக்கப்பட்டு ரத்தத்தில்  கலக்கிறது. இந்த நச்சுகள் செயற்கை ஹார்மோன்களாக செயல்படத் தொடங்குகின்றன. பிளாஸ்டிக் உபயோகத்தின்  பயங்கரம் பற்றி ஏற்கனவே நீங்கள் நிறைய அறிந்திருப்பீர்கள்.

பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வாங்குவது, பிளாஸ்டிக் டப்பாக்களில் சூடான உணவுப் பொருட்களை அடைத்து  எடுத்து வருவது, பிளாஸ்டிக் கவர்களில் காய்கறி மற்றும் பொருட்களை அடைத்து ஃப்ரிட்ஜினுள் வைப்பது என  பிளாஸ்டிக்கின் உபயோகம் தவிர்க்க முடியாததாகி இருக்கிறது. அந்த பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருள்  உணவோடு கலந்து விஷமாக மாறி நம் ஆரோக்கியத்தை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதைப் பற்றிப் பலரும்  யோசிப்பதில்லை. உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களிலும் காய்கறி, பழங்களை ஈரத்துணிகளிலும் உணவுப்  பொருட்களை மஞ்சள் பைகளிலும் வாங்கிய காலங்களில் இத்தனை உடல்நலப் பிரச்னைகள் இருக்கவில்லை.  யோசியுங்கள்.

 உணவு...

நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமானதுதானா? இயற்கை வேளாண்மையை மறந்துவிட்டோம். காய்கறிகள், பழங்கள்தானியங்கள் என எல்லாம் செயற்கை உரங்கள் போட்டே வளர்க்கப்படுகின்றன. அறுவடைக்குப் பின் நம் கைகளுக்கு  வந்து சேரும் போது கெட்டுப் போகாமலிருக்க ஏராளமான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டே வருகின்றன. இவை உள்  உறுப்புகளின் செயல்பாட்டையும் ஹார்மோன்களின் செயல்பாட்டையும் முற்றிலுமாக சிதைக்கக்கூடியவை.

தினமும் புரோட்டா கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகள் பல வீடுகளில் இருக்கிறார்கள். சாப்பிடக்கூடாது எனச்  சொன்னால், `ஊரே சாப்பிடுது... நான் சாப்பிட்டா என்ன?’ என்கிற எதிர்கேள்வி எழும். சாப்பிடாமலேயே இருப்பதற்கு  எதையாவது சாப்பிட்டால் தேவலை என்கிற எண்ணத்தில் மைதா உணவுகளான புரோட்டா, பப்ஸ், கேக் என கேடு  நிறைந்த உணவுகளை ஊட்டி வளர்க்கிறோம்.

இன்னொரு பக்கம் நம் பிள்ளைகளை Taller, Stronger, Sharper ஆக்குவதாக உத்தரவாதம் தருகிற  ஹெல்த் ட்ரிங்க்குகளை வாங்கிக் கொடுக்கிறோம். அது போன்ற பானங்களில் கலக்கப்படுகிற மால்ட்டும், தேவைக்கதிக  சர்க்கரையும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அஸ்திவாரத்திலேயே ஆட்டம் காணச் செய்பவை.

என் பொண்ணு தினம் காலையில ஃப்ரெஷ் ஜூஸ்தான் குடிச்சிட்டுப் போவா’ எனப் பெருமையாகச் சொல்லிக்  கொள்வார்கள். அந்த ஃப்ரெஷ் பழங்களின் பின்னணியில் உள்ள விவசாய அரசியல் அவர்களுக்குத் தெரியாது. மாதுளம்  பழம் வாங்கும் போது வெள்ளையாக, சற்றே துவர்ப்புச் சுவையுடன் உள்ள நாட்டுப் பழத்தை வாங்க மாட்டோம்.

பார்க்கப் பளபளப்பாக, செக்கச் செவேலென கவர்ந்திழுக்கும் சிவப்பு நிற பழங்களையே வாங்குவோம். அதுதான்  கெடுதியானது. பெண் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் என மேற்கத்திய உணவுகளைக் கொடுக்காமல், முளைகட்டிய  தானியங்களையும், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்களையும் ெகாடுப்பதை அம்மாக்கள் பழக்க  வேண்டும். பிராய்லர் சிக்கன் கொடுப்பதை அறவே தவிர்ப்பது அவசியமானது.

மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளையும், வெள்ளைச் சர்க்கரை, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் தூள் உப்பு  போன்றவற்றையும் எண்ணெயில் வறுத்த பொருட்களையும் குறைத்துக் கொள்ளவும். ஊட்டச்சத்து பானங்களுக்கு  பதிலாக கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும். சீமைப்பால்தான் நமக்குப்  பெரும்பாலும் கிடைக்கிறது. அதிலுள்ள புரதம் நம் உடலுக்கு ஒவ்வாதது. நாட்டுப்பசு மாடுகள் குறைந்து வருகின்றன.

அவையும் செயற்கைக் கருவூட்டலின் மூலமே கருத்தரிக்கின்றன. பால் அதிகம் சுரக்க ஹார்மோன் ஊசிகள்  போடப்படுகின்றன. அவை நம் உடலில் கலந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும். மீறி கருத்தரித்தாலும் கருச்சிதைவு  ஏற்படும். எனவே, பால், காபி, டீயை முற்றிலும் தவிர்க்கவும். இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப்  பொருட்களையே பயன்படுத்துங்கள். ஒருவேளை உணவு சமைக்காத உணவாக இருக்கட்டும். முளைகட்டிய பச்சைப்  பயறு, கேரட், வெள்ளரி, பழங்கள், உலர்ந்த பழங்கள் சிறந்தவை.

தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதில் சிவப்பரிசி, மாப்பிள்ளை சம்பா, தினை, வரகு, சாமை போன்றவற்றைப்  பயன்படுத்துங்கள்.நம் உடல், உறுப்புகளின் கடிகாரம் படி இயங்குகிறது. உடலில் 12 முக்கிய உறுப்புகள் உள்ளன. அவை  ஒவ்வொன்றும் ஒரு நாளின் குறிப்பிட்ட 2 மணி நேரம் அரிய செயல்திறனோடு இருக்கும். அதை ஒட்டியே நமது உணவு  மற்றும் வாழ்வியல் இருக்க வேண்டும்.

 உதாரணத்துக்கு... அதிகாலை 3 முதல் 5 மணியை பிரம்ம முகூர்த்தம்  என்கிறோம். அது நுரையீரலுக்கான நேரம்.  
இந்நேரத்தில் எழுந்திருப்பது ஆரோக்கிய வாழ்க்கையின் அடிப்படைப் பழக்கமாக வேண்டும். ஓஸோன் கதிர்கள் இறங்கும்  இந்நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்தால் நுரையீரல் பிரச்னைகள் சரியாகும். உடல் பலப்படும். காலை 5 முதல் 7 மணி  வரை பெருங்குடலுக்கான நேரம். அந்த நேரத்தில்தான் காலைக்கடன் கழிக்கப்பட வேண்டும். 7 முதல் 9 மணி  வயிற்றுக்கானது என்பதால், காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 9 முதல் 11 மணி வரை மண்ணீரலுக்கானது.  அப்போது திட, திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மதிய உணவு 1 முதல் 3 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இது சிறுகுடலின் நேரம். இரவு உணவு 7 முதல்  8 மணிக்குள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இரவு 11 முதல் 3 மணி வரை பித்தப் பை மற்றும் கல்லீரலுக்கான  நேரம். அப்போது தூங்கி ஓய்வெடுப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் நல்லபடியாக நடைபெறும். உடலுழைப்பே இல்லாத  நிலையில் தினமும் காலையில் மூச்சுப் பயிற்சியும் யோகாவும் செய்ய வேண்டியது அனைத்து வயதினருக்கும்  அவசியம்.

வாழ்க்கை முறை...

உள்ளங்கையில் உலகம் என்கிற மாயைக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தலைமுறைக் குழந்தைகள். இயற்கை  காற்றை சுவாசிக்காமல் விடிய விடிய ஏசி போட்டுக் கொண்டு கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு பெட்டிக்குள் அடைத்து  வைத்த மாதிரி தூங்குகிறோம். எப்போதும் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைலுடன் உறவாடுகிறோம்.

படிப்பு, அதை விட்டால் செல்போன், கம்ப்யூட்டர் என Gadgets மயக்கத்தில் கட்டுண்டுக் கிடக்கிறோம். இவற்றில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சானது, ஆண் பிள்ளைகளின் மலட்டுத்தன்மைக்குப்  பெரியளவில் காரணமாகும். குழந்தைதானே என அலட்சியமாக விட்டீர்களானால், அவர்களுக்கு குழந்தைகளே இல்லாமல்  போகிற அபாயத்துக்கு நீங்களும் துணை போவதாகவே அர்த்தம்.

இதையெல்லாம் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் பெற்றோரின் கடமை. நம்மால் சரிசெய்து கொள்ளக்கூடிய சின்னச்  சின்ன விஷயங்களான இவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பின்னாளில் விதியை சபிப்பதில் அர்த்தமில்லைதானே?...’’

Wednesday, 11 May 2016

Indian Agriculture













Agriculture plays a vital role in India’s economy. Over 58 per cent of the rural households depend on agriculture as their principal means of livelihood. Agriculture, along with fisheries and forestry, is one of the largest contributors to the Gross Domestic Product (GDP).

India is the largest producer, consumer and exporter of spices and spice products. It ranks third in farm and agriculture outputs. Agricultural export constitutes 10 per cent of the country’s exports and is the fourth-largest exported principal commodity. The agro industry in India is divided into several sub segments such as canned, dairy, processed, frozen food to fisheries, meat, poultry, and food grains.

The Ministry of Agriculture is responsible for the development of the agriculture sector in India. It manages several other bodies, such as the National Dairy Development Board (NDDB), to develop other allied agricultural sectors.

Market Size
Over the recent past, multiple factors have worked together to facilitate growth in the agriculture sector in India. These include growth in household income and consumption, expansion in the food processing sector and increase in agricultural exports. Rising private participation in Indian agriculture, growing organic farming and use of information technology are some of the key trends in the agriculture industry.
India is the largest producer of milk. It also has the largest bovine population. India is the largest importer of pulses also. India, the second-largest producer of sugar, accounts for 14 per cent of the global output. It is the sixth-largest exporter of sugar, accounting for 2.76 per cent of the global exports.

Investments
Several players have invested in the agricultural sector in India, mainly driven by the government’s initiatives and schemes.
According to the Department of Industrial Policy and Promotion (DIPP), the Indian agricultural services and agricultural machinery sectors have cumulatively attracted foreign direct investment (FDI) equity inflow.

Some major investments and developments in agriculture in the recent past are as follows:
Mahindra & Mahindra (M&M), India’s leading tractor and utility vehicle manufacturer, announced its entry into pulses retailing under the brand ‘NuPro’. Going forward, the company plans to foray into e-retailing and sale of dairy products.
Fertilizer cooperative IFFCO launched a joint venture with Japanese firm Mitsubishi Corp for manufacturing agrochemicals in India.

Agriculture, with its allied sectors, is unquestionably the largest livelihood provider in India, more so in the vast rural areas. It also contributes a significant figure to the Gross Domestic Product (GDP). Sustainable agriculture, in terms of food security, rural employment, and environmentally sustainable technologies such as soil conservation, sustainable natural resource management and biodiversity protection, are essential for holistic rural development. Indian agriculture and allied activities have witnessed a green revolution, a white revolution, a yellow revolution and a blue revolution.
This section provides the information on agriculture produces; machineries, research etc. Detailed information on the government policies, schemes, agriculture loans, market prices, animal husbandry, fisheries, horticulture, loans & credit, sericulture etc. is also available.

Fertilizers & Pesticides
Department of Fertilizers seeks to ensure adequate and timely availability of fertilizers at affordable prices for maximizing agricultural production in the country. Detailed information related to various divisions of administrative and vigilance, fertilizer accounts, movement and PSU etc. is given. Details of fertilizers policy and rates of fertilizers are provided. Link of the Fertilizers Monitoring System is also given.

Seeds
National Seeds Corporation Limited (NSC) undertakes production of certified seeds of nearly 600 varieties of 60 crops through its registered seed growers. Information about products, services, quality certification, grower agreement, distributionship, etc. is given. Details related to central schemes, Beej Prabhandan and training programmes are provided.

Green Revolution:
It stands for a major technological breakthrough in India
based on
(i)            improved seeds of high yielding varieties,
(ii)          adequate and assured supply of water for irrigation, and
(iii)         increased and appropriate application of chemical fertilizers for increasing agricultural production.

White Revolution:
It stands for remarkable increase in milk production and establishment of a national milk grid, removing regional and seasonal imbalances.
Among the technological inputs are  
(i)            crossbreeding of indigenous cows with high milk yielding European breed;
(ii)          pasteurization of milk for keeping it for a longer  duration;
(iii)         collection of quality milk from members in rural areas; and
(iv)        refrigerated transport system which helps sending milk to far off metropolitan
                   centres both by road and rail.
Blue Revolution:
It refers to big rise in catching of fresh water and marine fish.
Yellow Revolution: It refers to remarkably steady and assured supply of poultry
Products.

Pink Revolution:
It refers to a considerable rise in the production of quantity
of apples particularly in the states of Himachal Pradesh and J&K.

 Rice:
Rice is the most important food crop of India. It is predominantly a Kharif
or summer crop. It covers about one third of total cultivated area of the country
and provides food to more than half of the Indian population. Maximum
population of India is of rice consumers.
Rice is grown in almost all the states of India. The main rice
producing states are Tamilnadu, West Bengal, Andhra Pradesh, Bihar,
Jharkhand, Uttarakhand, Chhatisgarh, Punjab, Odisha, Uttar Pradesh,
Karnataka, Assam and Maharashtra. It is also grown in Haryana, Madhya
Pradesh, Kerala, G

Wheat:
Wheat is grown in  U.P., Punjab, Haryana, Rajasthan, Madhya Pradesh, Gujrat, Maharashtra. U.P.,
Punjab and Haryana.

Commercial Crops
As mentioned in the beginning of the lesson, commercial crops are those crops which
are grown for sale either in raw form or semi processed form. In this section we
will learn more about selected cash crop i.e. sugarcane, cotton and jute; two
beverages- tea and coffee; three oil seeds i.e. groundnut, mustard and rapeseed
  
Plantation Crops

(i) Tea:
India is famous for its tea gardens. We must have heard about tea gardens
of Assam and Darjeeling in West Bengal. It is being said that tea plantation in
India was started by the Britishers in 1923 when wild tea plants were discovered
by them in the hilly and forest areas of Assam. Tea is made from tender sprouts
of tea plants by drying them.
 At present, India is the leading tea producing Country in the world. China and Sri Lanka are respectively second and third largest producers of tea.

2 Coffee
It is the indigenous crop of Ethiopia (Abyssinia Plateau). From Ethiopia, it was taken to
Yemen in 11 th Century. From Arabia, the seeds were brought by Baba Budan
in 17th Century and were raised in Baba Budan hills of Karnataka. But it was
British planters who took keen interest and large coffee estates were established
in the hills of Western Ghat.

Monday, 2 May 2016

Benefits of Lemon Water & Honey













Packed with all the goodness, make it a point to begin your day with a glass of warm lemon water. Its cleansing and healing effects will have positive effects on your health in the long run. However, it is very important to note that when lemon juice comes directly in contact with the teeth, can ruin the enamel on the teeth. Hence, it is advised to consume it diluted and also rinse your mouth thoroughly after drinking lemon juice.
We know this very well how beneficial drinking water just after getting up is  and so many of us practice is too. But when we add honey and lemon in warm water and drink it daily, the benefits gets multiplied. Let's see how it is achieved.

1. Helps in losing weight - Drinking warm water mixed in honey and lemon is very good for health. It helps in losing weight and for this simple reason, people who want to lose weight should take it for sure.
2. No Constipation - This combination of warm water, lemon and honey is so good for health that if taken on an empty stomach it is helpful in keeping constipation at bay. It stimulates the digestive system, infuses water in dried stool which removes constipation completely.
3. Cleanse lymphatic system - Lack of water in the already dehydrated lymphatic system leads to problems like fatigue, disturbed sleep and blood pressure level and hinders mental development. But when you take water in lemon and honey, the lymphatic system gets hydrated and your body functions properly.
4. Keep bad breath at bay and improves oral health - Taste of honey and lemon removes any kind of bad breathe in your mouth. Also, these keep your mouth bacteria-free and that's how without direct care, mouth gets benefited indirectly.
5. Boost immune system - Vitamin C helps in fighting cold. As it is high in potassium, it controls blood pressure as well as stimulates brain function.
6. Clears skin - Presence of Vitamin C removes blemishes and wrinkles from skin. Also, it gives a brighter and glowing look. As a result of drinking lemon and honey in water, your skin gets cleared giving your face a cleaner and fairer look.

16 Health Benefits of Drinking Warm Lemon Water
  1. Lemon is an excellent and rich source of vitamin C, an essential nutrient that protects the body against immune system deficiencies
  2.  Lemons contain pectin fiber which is very beneficial for colon health and also serves as a powerful antibacterial 
  3.  It balances to maintain the body level
  4. Having warm lemon juice early in the morning helps flush out toxins 
  5. It aids digestion and encourages the production of bile 
  6.  It is also a great source citric acid, potassium, calcium, phosphorus and magnesium 
  7.  It helps prevent the growth and multiplication of pathogenic bacteria that cause infections and diseases 
  8.  It helps reducing pain and inflammation in joints and knees as it dissolves uric acid 
  9.  It helps cure the common cold 
  10. The potassium content in lemon helps nourish brain and nerve cells 
  11.  It strengthens the liver by providing energy to the liver enzymes when they are too dilute 
  12. It helps balance the calcium and oxygen levels in the liver In case of a heartburn, taking a glass of concentrated lemon juice can give relief
  13. It is of immense benefit to the skin and it prevents the formation of wrinkles and acne 
  14. It helps maintain the health of the eyes and helps fight against eye problems 
  15. Aids in the production of digestive juices 
  16.  Lemon juice helps replenish body salts especially after a strenuous workout session

arulalans